Tuesday, April 12, 2016

Ooty

ஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம்.  கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி.  நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.


உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர்.  எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.  ஊட்டியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்கலாம்..

பொடானிக்கல் கார்டன்:




Government Botanical Garden,  Ooty:
1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.. 
1)கீழ் பகுதியில் உள்ள பூங்கா - Lower Garden
2)புதிய பூங்கா - New Garden
3)இத்தாலிய பூங்கா - Italian Garden
4)பாதுகாக்கப்படும் இடம் - Conservatory
5)தண்ணீர் மாடி - Fountain Terrace
6)சிறிய செடிகளுக்கான பூங்கா - Nurseries


பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம்.  இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். 

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர்.
150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும்.
இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.
கட்டணம் பெரியோர் ரூ.10. சிறுவர் ரூ.5. கேமரா ஹேண்டிகேம் ரூ.30. வீடியோ கேமரா ரூ.75. தொலைபேசி-0423-2442545.



Rose Garden:
நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம்.  தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.  

ஊட்டி புகைப்படங்கள் - பொட்டனிக்கல் கார்டன்


Lake Park:
ஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா.  மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.  







Deer Park:
ஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா.  இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று.  ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது.  1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது.  தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.


Boat House:
ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள்,  குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன.  தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.


Government Museum:
ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள்,  நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன.  மேலும் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது.  இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.


Railway Station:
நீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.  இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும்,  ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.


மேலும் பார்க்ககூடிய இடங்கள் :  St, Stephen Church, Wax world(பார்க்க - மெலுகால் ஆன காந்தி படம்), கோல்ப் மைதானம்.


எப்படி செல்வது?
1)ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)ஊட்டியில் ரயில் நிலையம் உள்ளது. 


3)அருகில் உள்ள விமான நிலையம் - கோயம்பத்தூர் 105 கி.மீ தொலைவில்









பனிச்சரிவு ஏரி, ஊட்டி.

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.
ஊட்டி புகைப்படங்கள் -
சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது.
சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தொட்டபெட்டா மலைச் சிகரம், 

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது.
ஊட்டி புகைப்படங்கள் - தொட்டபெட்டா
தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.
இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். ஏப்ரல் மற்றும் மே சுற்றுலா காலங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
வருகையை இன்னும் சுவாரசியமாக்க, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலா பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

பைக்காரா ஏரி, ஊட்டி

முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏரி காண்பதற்கு ஒரு அற்புதமான அழகாக பச்சை தண்ணீருடன் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் இந்த பெரிய ஏரியை தோடர்கள் மிகவும் புனிதமாக கருதினர். வென்லாக் டவுன்ஸ் என்ற ஒரு பரந்த பசுமையான புல்வெளி , இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றிப் பயணம் செய்ய உதவுகிறது.
முக்கிய சாலையில் உள்ள ஒரு பாலம், புகைப்படங்கள் எடுக்க ஒரு சிறந்த இடம். பைக்காரா நதியில் ஒரு அணையும் மின் உற்பத்தி நிலையமும் உள்ளன.
நேரம்: 8.30 AM - 5.00 PM
நுழைவு கட்டணம்: இல்லை (ஏரி), படகு சவாரி செய்ய ரூ.200.

வென்லாக் டவுன்ஸ், ஊட்டி

வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த இடம் வேட்டைக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. பிரபலமான ஊட்டியின் வேட்டை நடைபெற்று வந்த இடம் இதுதான்.
சுதந்திர இந்தியாவில் வேட்டை தடை செய்யப்பட்ட பின், இது உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆனது. இப்போது இந்த இடத்தில் கோல்ப் மைதானம் மற்றும் அரசு ஆடு பண்ணை கொண்ட ஜிம்கானா கிளப் உள்ளது.

ஊட்டி ஷாப்பிங்,

ஊட்டியில் ஷாப்பிங் பிரபலமானது என்றாலும் எந்த சிறப்பு கைவினை பொருட்களும் இல்லாதது சில மக்களுக்கு ஏமாற்றம் தரும்.
ஷாப்பிங் ஆர்வலர்கள் ஊட்டியில் பல்வேறு பொருட்களை வாங்கலாம். இங்கு கிடைக்கும் தேயிலை மற்றும் காபி அற்புதமானது. நீங்கள் தேர்வு செய்ய பல விதங்கள் உள்ளன.
ஊட்டியில் டீ இலைகள் அல்லது காபி பீன்ஸ் வாங்காமல் வருவது ஒரு குற்றம் போன்றது. தேயிலையில் தேன், யூகலிப்டஸ், துளசி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை ஆப்பிள் மற்றும் பல வகைகள் இங்கு கிடைக்கும்.
வீட்டில் செய்யப்படும் சாக்லேட் கூட இங்கு கிடைக்கும். டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட், கசப்பான சாக்லேட், உலர் பழங்கள் சாக்லேட், சுவை சாக்லேட் மற்றும் மிட்டாய்களில் இருந்து தயாராகும் சாக்லேட் போன்றவற்றை விற்கும் பல கடைகள் உள்ளன.
தோடர் பாணி பழங்கால நகைகள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் மையங்களிலும் உள்ளன.

குன்னூர் 

குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது. உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல்  உங்களை  உடனடியாக  காதலில் வீழ்த்துகிறது.  தனிப்பட்ட  மணத்திற்கும் சுவைக்கும்  பெயர் பெற்ற  நீலகிரி  தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.  
குன்னூர் புகைப்படங்கள் - சிம்ஸ் பூங்கா 
குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில் ஒன்றாகும்.இது ஊட்டியை தலைமையகமாக கொண்ட மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு பல ஊர்களில் இருந்து , சில சமயம் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் நிறைந்துள்ளனர்.
நீங்கள் குன்னூரில் எப்போது சென்று தங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பதைக் காண இயலாது. பயணிகள்  குன்னூர் வரும் காலத்தைப்  பொருத்து மழைத் தூறல் அல்லது பெருமழை என வேறுபட்ட காட்சிகளோடு காணப்படுகிறது.
பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக  காணப்படும் இவ்விடம் எப்போதும்  ஆள் நடமாட்டத்துடன்  காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
நீலகிரி மலை ரயில் : நீலகிரியின் இதயத்துக்குள் ஒரு பயணம்
நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத  ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம்.
யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு  இணையான உலகப் பாரம்பரியம் மிக்க  பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.
ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட இந்தப்பாதையில் 1908 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மதராஸ் ரயில்வே அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும் இந்திய ரயில்வேயின் சேலம் பிரிவு மூலமாகவே இயக்கப் படுகிறது.
இன்னமும் இது நீராவி எஞ்சின் மூலமாகவே இயங்குகிறது. பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு டீசல் என்ஜினாக மாற்றும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.
நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும்  பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.
தேயிலை மற்றும் சாக்லேட்டின் சுவை
குன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை பயிரிடுவது தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது  ஆகியவற்றையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.
குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும்.
மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.
குன்னூர் பயணப்பட விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் இதன் அருகில்  செல்லக் கூட ஆசைப்பட மாட்டார்கள். அதிக மழை மற்றும் தாங்க முடியாத குளிர் காணப்படும் என்பதால்  மழைக்காலங்களை தவிர்ப்பது சிறந்தது.
குன்னூரை அடைவது மிக எளிது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று, அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.
கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும்  ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத்  தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.
சிம்ஸ் பூங்கா
கோத்தகிரி சாலையில் மேல் குன்னூரில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா இது. அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிப் பாதைகள், அழகிய மலர்ப்படுகைகள், அரிய வகை மூலிகைகள், செடிகள், மரங்கள் என இயற்கையின் சுரங்கம்போல் காட்சியளிக்கும்.
கட்டணம் பெரியவர் ரூ.5 சிறியவர் ரூ.2. கேமரா ரூ.25. வீடியோ கேமரா ரூ.100.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி
ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது. ராணுவக் குடியிருப்புகள் அமைந்த ராணுவ நகரம் இது. இந்திய ராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை உள்ளன.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை. கிருத்துவ மதபோதகரின் மகனாகப் பிறந்த ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் என்பவர் இங்கிருந்து தான் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.
கோத்தகிரி புகைப்படங்கள் - கேத்தரின் அருவி 
இந்த மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள சுற்றுலாத் தலங்கள்
இங்குள்ள புகழ் பெற்ற மலையேறும் தடங்கள்  : கோத்தகிரி - புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி - கொடநாடு பாதை, கோத்தகிரி - லாங்க்வுட் ஷோலா பாதை ஆகியன. நீலகிரியின் மலைகள் புல்வெளிகள் இடையே புகுந்து சென்று மலையேறுவோரின் மனதையும் ஆன்மாவையும் வருடிச்செல்லும் பல சிறிய தடங்களும் இங்கு உள்ளன.
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.
கோத்தர்களின் மலை
கோத்தகிரி மிகப் பழமையான மலைப் பிரதேசமாக இருந்தாலும் இதன் வரலாற்றின் பரப்பு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் முதலே கிடைத்துள்ளது. கோத்தகிரி என்ற பெயர் கோத்தர்களின் மலை என்று பொருள் படுகிறது.
கோத்தர்கள் பல நூற்றாண்டுகளாக கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கைவினைஞர் பழங்குடியினர் ஆவர்.அவர்கள் வெளி ஆட்களுடன் பழக விருப்பமில்லாதவர்கள். மேலும் அவர்களது எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக நிலையாக குறைந்து வருகிறது. கடைசியாக கணக்கெடுத்த போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
கோத்தகிரியை அடைவது எப்படி:  கோத்தகிரி ரயில் மற்றும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரிக்கு செல்ல சரியான சமயம்: கோத்தகிரிக்கு பயணம் செல்ல கோடை காலமே சிறந்த பருவமாகும்.

முதுமலை

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது.
முதுமலை புகைப்படங்கள் - தோகை விரித்தாடும் மயில்

நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன.
முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும்.
வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி மற்றும் மறியமான் ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன.
அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யாணைகள் இந்த சரணாலயத்தில் அலைந்து திரிகின்றன.
அதிக எண்ணிக்கையிலான அரிய உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள்) முதுமலையை தங்கள் இல்லமாக கொண்டு இருக்கின்றன. எனவே நாட்டில் வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதில் முதுமலை முக்கிய பங்கு வகிக்கின்றது.
காட்டு நெல், மஞ்சள், காட்டு இஞ்சி, இலவங்க பட்டை, மாங்காய், கொய்யா, மிளகு ஆகியவை இந்த சரணாலயத்தில் வளர்கின்றன, இவை பண்படுத்தப்பட்ட தாவரங்கள் வளர்ப்பதற்கு ஆதாரமாக இருப்பதை உறுதிசெய்கின்றன.
பரவிக்கிடக்கும் தாவரபட்சினிகளுக்கு இந்த தாவரங்கள் வாழ்வளித்து வருகின்றன. இங்கே வளரும் இரண்டு வகையான மூங்கில்கள்  (பம்பூசா மற்றும் டெண்ட்ரொகேலாமஸ் ஸ்டிரிக்டஸ்) யானைகள் போன்ற பெரிய விலங்குகளுக்கு உணவாக அமைகின்றன.
முதுமலையிலும் அதை சுற்றிலும்
முதுமலையில் நூற்றுக்கணக்கான ஈர்க்கும் இடங்கள் இருக்கின்றன,  பைக்காரா ஏரி, காலாட்டி அருவி, தெப்பக்காடு யாணை முகாம், மொய்யாறு நதி மற்றும் வன விலங்குகளை பார்க்கவும், அவற்றோடு பழகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற இடங்கள் ஆகியன அவற்றுள் சில.
ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையே நிலவுகின்றது. சாலை வழியாக முதுமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கிறது, எல்லா கால பாகுபாடின்றி அதிக வாகனப்போக்குவரத்தும் இருக்கின்றது. 
எழில்மிகும் காட்சிகளும், பார்வையிடும் இடங்களும், கடினநடைபயில கிடைக்கும் வாய்ப்புகளும், முதுமலையை குடும்ப சுற்றுலாவுக்கும், சாகச பயணத்திற்கும், ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடமாக மாற்றுகின்றது.

Friday, May 9, 2014

Ruthratcham


 ருத்ராட்ச முகங்களின் சிறப்புகள்

ருத்ரனின் அம்சமான ருத்ராட்சம், சிவபெரு மானின் திருநயனங்களில் இருந்து வீழ்ந்த விழிநீரின் அருள் வடிவமாகக் குறிப்பிடப்படுகிறது. மாமரத்தின் இலைகளைப் போன்று உள்ள ஒரு வகை மரத்தின், பசுமை கலந்த நீல நிறம் கொண்ட பழங்களின் உள்ளேயுள்ள விதைகளே ருத்ராட்சமாகும்.

நமது நாட்டில் வங்காளக் காடுகள், அசாம் காடுகள், ஹரித்வார், டேராடூன், நேபாளம், மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மைசூர் காடுகள், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் ருத்ராட்சம் கிடைக்கிறது. இவை வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் இருந்தாலும், நாம் பரவலாகப் பார்க்கும் பழுப்பு நிறமானவையே (கருப்பின் மங்கிய வடிவம்) அதிகமாகக் கிடைக்கின்றன.

ஒரு மரத்தின் விதை வடிவம் என்பதையும் தாண்டி, அதில் பலவித சூட்சுமமான தெய்வீக சக்திகள் உள்ளன என்பதை பலர் தமது சுய அனுபவங்களிலும், பலர் தமது அறிவியல்பூர்வமான ஆய்வுகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொருவிதமான பயனைத் தரத்தக்க சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன.

* அதில் ஏக முகம் எனப்படும் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்றாகும். அது பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய, விலை மதிக்கமுடியாத ஒன்றாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த ஏக முகருத்ராட்சம்.

ஒரு உண்மையான ஏக முக ருத்ராட்சத்தை ஒரு படி அளவுள்ள ஏதாவதொரு தானியத்தின் அடியில் இட்டால், அது தானாகவே மேலே கிளம்பி வரக்கூடிய தன்மை பெற்றதாகும் என்று ஒரு ஆச்சரியமான தகவலை பழைய நூல் ஒன்று தெரிவிக்கிறது. ஒரு முக ருத்ராட்சம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரியது;

சகலவிதமான பித்ரு தோஷங்களையும் விலக்கி நல்வாழ் வளிக்கும் தன்மை பெற்றது. எல்லா நலன்களையும் தரக்கூடிய இந்த ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். சிவ மஹா புராணத்தில் ஒவ்வொரு வகை ருத்ராட்சங்களுக்கும் உரிய பீஜ மந்திரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இரு முகங்களைக் கொண்ட, த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கு உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவு முறைகளுக்குள் நல்ல, சுமூகமான போக்கு நிலவும். இது நவக் கிரகங்களில் சந்திரனுக்கு உரியதாகும். மனோகாரகனான, மாத்ருகாரகனான சந்திர பலம் ஒரு ஜாதகத்தில் மிக அவசியமானதாகும்.

மனம் எப்பொழுதும் சீரான நிலையிலிருக்க ஸ்திரத்தன்மை முக்கியம். மற்றவர்களோடு பழகும் தன்மையில் மேம்பட்டிருக்க வேண்டுமாயின் சந்திரனின் பலம் அவசியமாகிறது. மேலும் நமது உடலில் உள்ள நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதில் இருமுக ருத்ராட்சம் சிறப்பு வாய்ந்தது.

ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்து, மனோரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரமானது, ஓம் நம என்பதாகும்.

* மூன்று முகங்களைக்கொண்ட திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரியது. விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவிக்க விரும்புவோர் மும்முக ருத்ராட்சத்தை அணியலாம். இது மனதில் தைரியத்தையும், துணிவையும், தருவதோடு உடலியக்கங்களின் துடிப்பான செயல்திறனையும் மேம்படுத்தும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள், தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் ஆகியோரது சுய வளர்ச்சியையும் உயர்த்தும். சுறுசுறுப்பு குறைந்தவர்களும் இதையணிந்து பயன் பெறலாம். இதன் பீஜ மந்திரம், ஓம் க்லிம் நம என்பதாகும்.

* நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக ருத்ராட்சம், பிரம்மாவின் அம்சம் கொண்டது. நவக்கிரகங்களில் புதனுடைய அம்சத்தைப் பெற்றது. இதையணிவதால் சுவாசக் கோளாறுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். திக்குவாய் உள்ளவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிவதால், அவர்களது பேச்சுத்திறன் நிச்சயம் மேம்படும்.

கணிப்பொறித்துறையினர், மின்னியல் கருவிகள் சம்பந்தமான தொழில், அறிவியல் ஆய்வு சம்பந்தமான துறை, ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் இதை அணிவதால் நற்பலன்களைப் பெறலாம். இதன் பீஜ மந்திரம், ஓம் ஹ்ரீம் நம.

* பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக (ஐந்து முகம்) ருத்ராட்சம், சிவ அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் குரு பகவானின் அம்சம் பெற்றதோடு, ஆழ்ந்த கல்வியறிவையும், மனதின் சமநிலையையும் தரும் தன்மையைப் கொண்டது.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருத்துவ குணம், ரத்த அழுத்தம் சம்பந்தமான உடற்பிணிகளையும் நீக்கக்கூடிய தன்மையையும் பெற்றதாக இந்த ருத்ராட்சம் விளங்குகிறது. நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று அமைந்து காப்பாற்றக்கூடியது.

இது நமது மனோ உடலின் உயிரியல் தன்மையை ஒளிரவைக்கக்கூடிய காந்த ஆற்றலை உள்ளடக்கியதாகும். இதற்கான பீஜாட்சரமானது, ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

* சண்முக ருத்ராட்சம் எனப்படும் ஆறுமுகம் கொண்ட ருத்ராட்சம் கந்தக்கடவுளின் அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் சுக்ரனின் அம்சம் பெற்றது. கலியுகம் சார்ந்த உலக வாழ்க்கை நலன்களைத்தரும் வல்லமை கொண்டது. உடலில் ஜனனேந்திரியங்களின் செயல்பாட்டில் சம நிலையை உண்டாக்கி மனதின் வசீகர சக்தியை மேம்படுத்தக்கூடியது.

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான போக்கு நிலவச் செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. வெகுஜனத் தொடர்பு சாதனங்களில், தொழில் ரீதியாக சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இதை அணிந்து ஜனவசிய சக்தியைப் பெற்று நல்ல பலன்களை அடையலாம். இதற்கான மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம ஆகும்.

* சப்தமுக (ஏழு முகம்) ருத்ராட்சம் மகாலட்சுமியின் மங்கல சுபாம்சத்தைக் கொண்டது. நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றியமைக்கக் கூடியது.

நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த ருத்ராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது. ஏழரைச்சனியின் காலம், அஷ்டமச் சனியின் காலம், அர்த்தாஷ்டமச் சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிரகத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக ருத்ராட்சம் பெரும் துணை புரியும்.

இந்த வகை மணிகளை உடலில் அணிவதைவிட பூஜையறையில் வைத்துத் தினமும் பூஜிப்பதே நல்லது. நீண்ட காலமாகத் தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம். இதற்கான மந்திரம் ஓம் ஹம் நம என்பதாகும்.

* விநாயகப் பெருமானின் அம்சம் கொண்ட அஷ்டமுக ருத்ராட்சமானது எண்முக மணியாகும். நவக்கிரகங்களில் இது ராகுவின் அலைவீச்சைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான, அலையியக்கக் காந்த மண்டல சுழற்சியினை உடையது.

ருத்ராட்சங்களிலேயே மிக, மிகக் கவனமாகச் சோதனை செய்த பின்பே இதை வீட்டில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். உடலில் அணிவது பெரும்பாலும், இந்த மணியின் விஷயத்தில் தவிர்க்கப்படுகிறது. உளவியல் சிக்கல்களுக்குட்பட்டவர்களின் மனநலம் மேம்பட ஒரு குறிப்பிட்ட கால அளவிலும், ஒரு குறிப்பிட்ட முறையிலும் இதை பூஜை செய்து வருவது மிக, மிக நல்லதாகும்.

இந்த மணிகள் வாழ்வியலின் நூதனமான அனுபவங்களைத் தந்து, மனோரீதியான தனிப்பட்ட விளைவுகளால், ஒருவரை அறிவியலின் அடிப்படைகளுக்குட்படாத புதிரான விளைவுகளுக்கு உள்ளாக்கக்கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப் பெற்றவையாகும். இந்த மணிக்குரிய மந்திரமானது ஓம் ஹம் நம என்பதாகும்.

* அன்னை பராசக்தியான ஆத்யா சக்தியின் அம்சம் கொண்டது நவமுக (ஒன்பது முகம்) ருத்ராட்சம். நவக்கிரகங்களில் கேதுவுக்குரியது. இதைப் பெரும்பாலும் சாக்த முறையிலான சக்தி சாதனையின் நெறி நிற்போர், தமது சாதனையின் பூர்த்திக்காக விரும்பி அணிவர்.

இதை அணிந்தால் பொறுமையும், நிதானமும் மனதில் நிலைத்து நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். மேலும், பிற மொழிகளில் நிபுணத்துவம் பெறவும், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கும் இந்த மணி பெரிதும் உறுதுணை புரிகிறது.

கேது கிரகத்தின் கெடுபலன்களான கீழே விழுந்து அடிபடுதல், கடும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட கனவுகள், புரியாத உடல் நிலைக் கோளாறுகள் ஆகிய சங்கடங்களைச் சரியாக்கும் தன்மையை உடையது இந்த ருத்ராட்சம். இதற்கான மந்திரம், ஓம் ஹ்ரீம் நம என்பதாகும்.

* தசமுக (பத்து முகம்) ருத்ராட்சமானது மகாவிஷ்ணுவின் அம் சம் பொருந்தியது. தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. இதற்கான மந்திரம் ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். இந்த மணி ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்றுத்தருவதாக நம்பிக்கை. ஏகாதச ருத்ராட்சமானது பதினோரு முகங்களைக் கொண்டதாகும்.

ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் பெற்ற இந்த மணி, மனதின் ஆற்றலைப் பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரிய விரதத்தில் நிலைபெற விரும்புவோர் இதனையணிந்து நற்பயன் பெறலாம். இதற்கான மந்திரம் ஓம் ஹ்ரீம் ஹம் நம என்பதாகும்.

* துவாதச ருத்ராட்சம் எனப்படும் பன்னிருமுக ருத்ராட் சம், சூரிய பகவானின் திருவருளைப் பெற்றுத்தரக்கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மிக பலம் வேண்டுவோர் இம்மணியை அணியலாம். இதன் மந்திரமானது ஓம் க்ரௌம் ஷெளம் ரௌம் நம. 

Monday, April 21, 2014

ஏற்காடு

ஏற்காடு - Yercaud, Jewel of South India.

ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு.  கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 


இன்றுவரை தமிழகமே அதிக வெப்பத்துடன் காணப்பட்டாலும் ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை என்பது ஏற்காட்டின் தனிச் சிறப்பு.


ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் கூறுவது போல ஏற்காடு தென்னிந்தியாவின் விலையுயர்ந்த அணிகலன் என்று அழைக்கப்படுகிறது. இனி ஏற்காட்டில் காணவேண்டிய இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். 


Yercaud Lake:
அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் சூழ படகுப் பயணம் செய்யவேண்டுமா? உங்களுக்காகவே காத்திருக்கிறது ஏற்காடு ஏரி. Emerald lake என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. 




ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.  


Lady's seat:
ஏற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.  வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.






Killiyur Water falls:
ஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.  மழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் நேரத்தில் இங்கு செல்வது நல்லது.  




Pagoda point:
இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள்  இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.  ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. 




Bear's cave:
தனியாருக்குச் சொந்தமான இந்தக் குகை, கரடிகள் தங்கிய இடம்.  இந்தக் குகையில் சேர்வராயன் மலைக் கோவிலுக்கு பாதை உண்டு என்று நம்பப்படுகிறது ஆனால் உறுதியாக கூறமுடியாது. யாரேனும் உள்ளே சென்று பார்த்தால் தான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்.




Servarayan temple:
சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். மே மாதம் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம்.  இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.




National Orchidarium, Botanical Garden:
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன.  இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 






ஏற்காடு செல்ல ஏற்ற நேரம் - ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை.


விழாக்கள்: இங்கு மே மாதம் ஏழு நாட்கள் கோடைத் திருவிழா நடைபெறும். 


எப்படி செல்வது?
1) ஏற்காட்டிற்கு சேலத்தில் இருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - சேலம் 16 கி.மீ தொலைவில்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 125 கி.மீ தொலைவில்.

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி - kodaikanal

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி - kodaikanal

மலைகளின் அரசி ஊட்டியைப் பற்றி முன்னரே விளக்கியிருந்தேன். இப்போது மலைகளின் இளவரசியைப் பற்றி பார்க்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Click to enlarge map
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு,  காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.


வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.


Silver Falls
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.


இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.


Kodaikanal Lake
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.


150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
Bryant Park
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.  


வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).


Coaker's walk




டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. 


இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம்   எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.


Dolphin's nose
பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.
Suicide point

 தலையர் நீர்வீழ்ச்சி:
      இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது.  இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.


Thalaiyar falls
குணா குகைகள்:
      கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.  அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம். 


Guna caves
Pine forest:
      இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.  கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.


Pine forest
பியர் சோழா அருவி(Bear shola Falls):
        கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது.  அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.


Bear shola falls
Kodaikanal solar observatory:
         கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார். 


Solar observatory
திறந்திருக்கும் நேரம் 

  • காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
  • சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
        இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
Pillar rocks
பாம்பர் அருவி:
         இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
Pambar falls
குறிஞ்சி ஆண்டவர் கோவில்:
       1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். தற்போது பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில். 
      12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூவை இங்கு பார்க்கலாம்.
Kurinji Andavar Temple
செண்பகனூர் அருங்காட்சியகம்:
           இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது.  கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும். 


Shenbaganur Museum
விழாக்கள் - வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா நடத்தப்படுகிறது.

செல்ல உகந்த நேரம் - ஏப்ரல் முதல் ஜூன் வரை

எப்படி செல்வது?
  • கொடைக்கானலுக்கு திண்டுக்கல், பெரியகுளம், மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கொடை ரோடு, 80 கி.மீ தொலைவில்
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 121 கி.மீ தொலைவில்.
 

Saturday, April 19, 2014

Asbetos

 நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ்


 


ஆஸ்பெஸ்டாஸில் பல்வேறு வகைகள் உள்ளன, ஆனால் பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் என்று ஏதுமில்லை என்கிறார் ஆய்வாளர் முனைவர் யேல் ஸ்டீன். இவரும் இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலையைச் சேர்ந்தவர்தான்.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆஸ்பெஸ்டாஸ் ஒழிப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பல நிபுணர்கள் இப்பொருளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கனடா நாட்டின் ஆண்டோரியோ நகரில் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டினால் புற்றுநோய் ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று கூறிய முனைவர் அலெக் ஃபர்குஹார், இந்தியாவில் இதன் பாதிப்பு 100 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

“ஆஸ்பெஸ்டாஸ் பொறுத்தவரை பாதுகாப்பான பயன்பாடு என்றும் ஏதுமில்லை. நான் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து கோரிக்கை விடுக்கிறேன், கனடாவில் நாங்கள் செய்துவரும் தவறை நீங்கள் (இந்தியர்கள்) செய்யாதீர்கள். ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டை நிறுத்துங்கள், இல்லையெனில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் இந்தியர்கள் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு 52 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதன் விற்பனையும் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகமாக ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தும் நாடு இந்தியா. 2008ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மூன்றரை இலட்சம் டன் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்பெஸ்டாஸை மக்களும் புறக்கணிக்க வேண்டும், நாடும் தடை செய்ய வேண்டும். நடக்குமா?

Truth

 உலகில் மறைந்து போன உண்மை தகவல்கள்


பல மில்லியன்கள் வருடங்களில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண்ணை உயர்த்தி பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப்போர் வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில், இந்தக் காலங்களை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள்.

மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில், ‘மம்மோத்’ என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன.

இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான ‘மம்மோத்’ உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத், தற்கால யானைகளை விட மிகப்பெரியவை. உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் அவை காணப்பட்டன. மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக்கூடியவை.

இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. மம்மோத் யானையினம் மனிதர்களின் வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப் பூமியிலிருந்து அழிந்து போயின. இங்கிலாந்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவை வாழ்ந்திருக்கின்றன. இவை அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள் முளைக்கும் பிரதே சங்களாக மாறின.

ஆனாலும் வேட்டையாடியே மனித இனம் வாழ்ந்து வந்தது. இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலான, கால கட்டத்தைக் கடைசி கற்காலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கடைசி கற்காலத்தில் இங்கிலாந்து, வைல்ட் ஷையர் என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது (இதே வைல்ட் ஷையரிலிருந்து தான் இந்தத் தொடரின் முதல் பகுதி ஆரம்பமாகியது).

சிறிய, பெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு கட்டப்பட்டிருந்தது. மிகப் பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதையே ‘ஸ்டோன் ஹெஞ்ச்‘ என்று அழைக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள்.

இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது என்பது தான். ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரம் உள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப்பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன. எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது.
ஒன்றிரண்டு கற்களை அல்ல.

மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தி இருக்கிறார்கள். இது ஆசியா போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும், யானைகளைக் கொண்டு, ஒவ்வொன்றாக இழுத்து வந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம். இல்லை ஐஸ் காலம் என்றாலாவது மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் இல்லை.

இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட, வசதியற்ற சூழ்நிலையில், மலைப்பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அப்படிக் கொண்டு வந்திருந்தாலும், கிடையாக இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்? நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி வைத்திருக்க முடியும்? அக்கால மக்கள் எப்படி அந்த கற்களை இழுத்து வந்தார்கள், எப்படி அவற்றை நிமிர்த்தினார்கள், நிமிர்த்திய இரு கற்களுக்கு மேல், கிடையாக மற்ற கற்களை எப்படி அடுக்கினார்கள் என்று பல விதத்தில், இப்போது விளக்கம் சொல்லப்படுகிறது.

மேலே படங்களில் அவை காட்டப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போலவே கற்கள் கொண்டு வரப்பட்டுக்கட்டப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இவ்வளவு நுணுக்கமான அறிவை யார் இவர்களுக்குக் கொடுத்தார்கள்? மனிதன் தோன்றிய பல லட்சம் ஆண்டுகளிலிருந்து கடைசிக் கற்காலம் வரை, மனித இனம் எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாமல், ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்திருக்கிறது.

அதிகபட்சம் ஒரு வில்லு, ஒரு அம்புடனோ, கல்லினால் செய்த கோடரியுடனோதான், எந்தவித மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது. மிருகங்களை வேட்டையாடுவதே உணவிற்கான முக்கிய தொழிலாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் திடீரென அந்த மனிதர்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியது.

அது வரை அறிவேயில்லாத, மிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்த மனிதர்களில், மின்னல் அடித்த கணத்தில் ஏற்பட்டது போல, ஒரு மாற்றம் ஏற்பட்டது. லட்சம் ஆண்டுகள் ஏற்படாத மாற்றம் சடுதியாகத் திடீரென தோன்றியது. அந்த மாற்றத்தினால், இப்போது இருக்கும் மனிதர்களால் கூடச் செய்ய முடியாத சில செயல்களை, அனாயாசமாக அவர்கள் செய்திருக்கிறார்கள்.

அதற்குரிய அறிவும், ஆற்றலும் திடீரென அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அது எப்படித் தோன்றியது என்பது தான் நமக்கு முன் உள்ள கேள்வி. அதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்க முடியுமா? ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தை பார்த்தால், நிலையாக நிறுத்தப்பட்ட கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கி, அதற்கு மேலே வைக்கும் கல்லில் அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கி, கற்கள் விலகாமல் இருக்க, பக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கி, கனகச்சிதமாக வட்டவடிவமாக பொருந்தும் படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால், அவை வெறும் கற்கள்தான். கற்களால் அடித்து தேய்த்து, இந்தவித உருவங்களுக்கு மாற்றியுள்ளார்கள். இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள் செய்யவில்லை, ஏலியன்கள்தான் செய்தார்கள் என்று வேறொரு பிரி வினர்கள் சொல்ல, மனிதர்கள் தான் செய்தார்கள்.

ஆனால் ஏலியன்கள் அவர்களுக்கு உதவினார்கள் என்று மற்றுமொரு பிரிவினரும் சொல்ல, இதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுடன் அமைதியாக இருக்கிறது ஸ்டோன் ஹெஞ்ச். இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே கால கட்டத்தில் எகிப்தில் முதல் பிரமிட்டாக ‘கீஸா’ பிரமிட்கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

கீஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும்போது, அதை பலர் நம்பு வதில்லை. அந்த அளவுக்கு, மர்மங்களையும் ஆச்சரியங்களையும் தனக்குள் உள்ள டக்கிய பிரமிட் அது. 146 மீட்டர் உயரமான அந்தப் பிரமிட், 4500 வருடங்கள் பழமையானது.

மிகப்பிரமாண்டமான ஒரு கட்டடமாக கீஸா பிரமிட்டை பார்க்கும் நாம், அது கட்டப்பட்டபோது நடந்த முக்கிய விசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்தப் பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுர கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. அந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் வரை எடையுள்ளவை.

இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ஸ்டோன் ஹெஞ்ச் போலவே, அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கே, ஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100 வருடங்களுக்கு மேல் தேவை.

சதுரமாக செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கொண்டு வர, 5000 பேர் சேர்ந்து உழைத்தாலும் 500 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை. 4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பிரமிட் குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது.

குறுகிய காலம் என்று குறிப்பிட்டது, மனிதனால் கட்டப்படக்கூடிய கால அளவை விட குறுகிய காலம் என்பதை. அப்படியென்றால், கீஸா பிரமிட்டை யார் கட்டினார்கள்? யாருடைய உதவியுடன் கட்டினார்கள். நம்பவே முடியாத ஒரு காலத்தில் இப்படி ஒரு அறிவு பூர்வமான கட்டடத்தை கட்டுவதற்கு எப்படிச் சாத்தியம் ஆகியது? இவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை. பல விதங்களில் பல பதில்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை முழுமையாக ஏற்க கஷ்டமாகவே இருக்கிறது.

பிரமிடுகளின் மர்மங்களையும், அவற்றுடன் ஏலியன்கள் சம்பந்தப்பட்டது என்று நம்பப்படுவதையும் அந்தச் சுழலில் இருந்து சீக்கிரம் நம்மால் விலக முடியாது. ஸ்டோன் ஹெஞ்சிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ‘சில்பரி ஹில்’ என்னும் இடம். அங்கு நாம் யாருமே நினைக்க முடியாத அதிசயம் ஒன்று உள்ளது.

4,500 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் பிரமிட் உருவாக்கப்பட்ட காலம், ஸ்டோன் ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலங்களில் சில்பரி ஹில்லிலும் ஒரு பிரமிட் உருவாக்கப்பட்டிருக்கிறது. “பிரமிட்டா? அதுவும் இங்கிலாந்திலா?” என்று ஆச்சரியப் படுகிறீர்களா? “ஆம்! பிரமிட்டேதான்”. எகிப்தின் பிரமிட், ஸ்டோன் ஹெஞ்சின் வட்ட வடிவம் என இரண்டையும் இணைத்த மர்மமாக, வரலாற்றிலேயே வட்டவடிவத்தில் அந்தப் பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூம்பு வடிவ அமைப்பையே பிரமிட் என்பார்கள்.

கீழே சதுரமான அடியைக் கொண்டிருப்பது எகிப்திய பிரமிட். கீழே வட்டமான அடியைக் கொண்டு அமைக்கப்பட்டது சில்பரி பிரமிட். படத்தில் பார்க்கும்போது ஏதோ சிறிய மலை போல காணப்படும் இது, கற்களால் எவராலோ கட்டப்பட்டிருக்கிறது.

மேலே புற்கள் முளைத்திருக்கும் அந்தப் பிரமிட்டின் உள்ளே இருப்பது எல்லாமே கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள். இவை அனைத்தும் உலகில் மறைந்துபோன மர்மங்கள் ஆகும்.