Tuesday, April 12, 2016

Ooty

ஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம்.  கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி.  நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.


உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர்.  எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.  ஊட்டியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்கலாம்..

பொடானிக்கல் கார்டன்:




Government Botanical Garden,  Ooty:
1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.. 
1)கீழ் பகுதியில் உள்ள பூங்கா - Lower Garden
2)புதிய பூங்கா - New Garden
3)இத்தாலிய பூங்கா - Italian Garden
4)பாதுகாக்கப்படும் இடம் - Conservatory
5)தண்ணீர் மாடி - Fountain Terrace
6)சிறிய செடிகளுக்கான பூங்கா - Nurseries


பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம்.  இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். 

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர்.
150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும்.
இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.
கட்டணம் பெரியோர் ரூ.10. சிறுவர் ரூ.5. கேமரா ஹேண்டிகேம் ரூ.30. வீடியோ கேமரா ரூ.75. தொலைபேசி-0423-2442545.



Rose Garden:
நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம்.  தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.  

ஊட்டி புகைப்படங்கள் - பொட்டனிக்கல் கார்டன்


Lake Park:
ஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா.  மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.  







Deer Park:
ஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா.  இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று.  ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது.  1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது.  தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.


Boat House:
ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள்,  குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன.  தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.


Government Museum:
ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள்,  நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன.  மேலும் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது.  இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.


Railway Station:
நீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.  இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும்,  ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.


மேலும் பார்க்ககூடிய இடங்கள் :  St, Stephen Church, Wax world(பார்க்க - மெலுகால் ஆன காந்தி படம்), கோல்ப் மைதானம்.


எப்படி செல்வது?
1)ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)ஊட்டியில் ரயில் நிலையம் உள்ளது. 


3)அருகில் உள்ள விமான நிலையம் - கோயம்பத்தூர் 105 கி.மீ தொலைவில்









பனிச்சரிவு ஏரி, ஊட்டி.

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.
ஊட்டி புகைப்படங்கள் -
சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது.
சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தொட்டபெட்டா மலைச் சிகரம், 

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது.
ஊட்டி புகைப்படங்கள் - தொட்டபெட்டா
தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.
இந்தச் சிகரம் ஊட்டியின் மற்றொரு பிரபலமான சுற்றுலா மையம். ஏப்ரல் மற்றும் மே சுற்றுலா காலங்களில், நாளொன்றுக்கு சுமார் 3500 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
வருகையை இன்னும் சுவாரசியமாக்க, வனத்துறை அதிகாரிகள் மலை மேல் ஒரு ஆய்வு மையத்தை அமைத்துள்ளனர். அங்குள்ள இரண்டு தொலைநோக்கிகள் மூலம், சுற்றுலா பயணிகள் கண்ணுக்கினிய பள்ளத்தாக்கைக் காண முடியும்.

பைக்காரா ஏரி, ஊட்டி

முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏரி காண்பதற்கு ஒரு அற்புதமான அழகாக பச்சை தண்ணீருடன் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் இந்த பெரிய ஏரியை தோடர்கள் மிகவும் புனிதமாக கருதினர். வென்லாக் டவுன்ஸ் என்ற ஒரு பரந்த பசுமையான புல்வெளி , இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றிப் பயணம் செய்ய உதவுகிறது.
முக்கிய சாலையில் உள்ள ஒரு பாலம், புகைப்படங்கள் எடுக்க ஒரு சிறந்த இடம். பைக்காரா நதியில் ஒரு அணையும் மின் உற்பத்தி நிலையமும் உள்ளன.
நேரம்: 8.30 AM - 5.00 PM
நுழைவு கட்டணம்: இல்லை (ஏரி), படகு சவாரி செய்ய ரூ.200.

வென்லாக் டவுன்ஸ், ஊட்டி

வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த இடம் வேட்டைக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. பிரபலமான ஊட்டியின் வேட்டை நடைபெற்று வந்த இடம் இதுதான்.
சுதந்திர இந்தியாவில் வேட்டை தடை செய்யப்பட்ட பின், இது உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத்தலம் ஆனது. இப்போது இந்த இடத்தில் கோல்ப் மைதானம் மற்றும் அரசு ஆடு பண்ணை கொண்ட ஜிம்கானா கிளப் உள்ளது.

ஊட்டி ஷாப்பிங்,

ஊட்டியில் ஷாப்பிங் பிரபலமானது என்றாலும் எந்த சிறப்பு கைவினை பொருட்களும் இல்லாதது சில மக்களுக்கு ஏமாற்றம் தரும்.
ஷாப்பிங் ஆர்வலர்கள் ஊட்டியில் பல்வேறு பொருட்களை வாங்கலாம். இங்கு கிடைக்கும் தேயிலை மற்றும் காபி அற்புதமானது. நீங்கள் தேர்வு செய்ய பல விதங்கள் உள்ளன.
ஊட்டியில் டீ இலைகள் அல்லது காபி பீன்ஸ் வாங்காமல் வருவது ஒரு குற்றம் போன்றது. தேயிலையில் தேன், யூகலிப்டஸ், துளசி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை ஆப்பிள் மற்றும் பல வகைகள் இங்கு கிடைக்கும்.
வீட்டில் செய்யப்படும் சாக்லேட் கூட இங்கு கிடைக்கும். டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட், கசப்பான சாக்லேட், உலர் பழங்கள் சாக்லேட், சுவை சாக்லேட் மற்றும் மிட்டாய்களில் இருந்து தயாராகும் சாக்லேட் போன்றவற்றை விற்கும் பல கடைகள் உள்ளன.
தோடர் பாணி பழங்கால நகைகள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் மையங்களிலும் உள்ளன.

குன்னூர் 

குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது. உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல்  உங்களை  உடனடியாக  காதலில் வீழ்த்துகிறது.  தனிப்பட்ட  மணத்திற்கும் சுவைக்கும்  பெயர் பெற்ற  நீலகிரி  தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.  
குன்னூர் புகைப்படங்கள் - சிம்ஸ் பூங்கா 
குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில் ஒன்றாகும்.இது ஊட்டியை தலைமையகமாக கொண்ட மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு பல ஊர்களில் இருந்து , சில சமயம் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் நிறைந்துள்ளனர்.
நீங்கள் குன்னூரில் எப்போது சென்று தங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பதைக் காண இயலாது. பயணிகள்  குன்னூர் வரும் காலத்தைப்  பொருத்து மழைத் தூறல் அல்லது பெருமழை என வேறுபட்ட காட்சிகளோடு காணப்படுகிறது.
பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக  காணப்படும் இவ்விடம் எப்போதும்  ஆள் நடமாட்டத்துடன்  காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
நீலகிரி மலை ரயில் : நீலகிரியின் இதயத்துக்குள் ஒரு பயணம்
நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத  ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம்.
யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு  இணையான உலகப் பாரம்பரியம் மிக்க  பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.
ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட இந்தப்பாதையில் 1908 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மதராஸ் ரயில்வே அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும் இந்திய ரயில்வேயின் சேலம் பிரிவு மூலமாகவே இயக்கப் படுகிறது.
இன்னமும் இது நீராவி எஞ்சின் மூலமாகவே இயங்குகிறது. பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு டீசல் என்ஜினாக மாற்றும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.
நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும்  பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.
தேயிலை மற்றும் சாக்லேட்டின் சுவை
குன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை பயிரிடுவது தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது  ஆகியவற்றையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.
குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும்.
மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.
குன்னூர் பயணப்பட விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் இதன் அருகில்  செல்லக் கூட ஆசைப்பட மாட்டார்கள். அதிக மழை மற்றும் தாங்க முடியாத குளிர் காணப்படும் என்பதால்  மழைக்காலங்களை தவிர்ப்பது சிறந்தது.
குன்னூரை அடைவது மிக எளிது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று, அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.
கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும்  ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத்  தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.
சிம்ஸ் பூங்கா
கோத்தகிரி சாலையில் மேல் குன்னூரில் அமைந்துள்ள பிரபலமான பூங்கா இது. அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிப் பாதைகள், அழகிய மலர்ப்படுகைகள், அரிய வகை மூலிகைகள், செடிகள், மரங்கள் என இயற்கையின் சுரங்கம்போல் காட்சியளிக்கும்.
கட்டணம் பெரியவர் ரூ.5 சிறியவர் ரூ.2. கேமரா ரூ.25. வீடியோ கேமரா ரூ.100.
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி
ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது. ராணுவக் குடியிருப்புகள் அமைந்த ராணுவ நகரம் இது. இந்திய ராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை உள்ளன.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர், ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை. கிருத்துவ மதபோதகரின் மகனாகப் பிறந்த ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் என்பவர் இங்கிருந்து தான் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.
கோத்தகிரி புகைப்படங்கள் - கேத்தரின் அருவி 
இந்த மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள சுற்றுலாத் தலங்கள்
இங்குள்ள புகழ் பெற்ற மலையேறும் தடங்கள்  : கோத்தகிரி - புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி - கொடநாடு பாதை, கோத்தகிரி - லாங்க்வுட் ஷோலா பாதை ஆகியன. நீலகிரியின் மலைகள் புல்வெளிகள் இடையே புகுந்து சென்று மலையேறுவோரின் மனதையும் ஆன்மாவையும் வருடிச்செல்லும் பல சிறிய தடங்களும் இங்கு உள்ளன.
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.
கோத்தர்களின் மலை
கோத்தகிரி மிகப் பழமையான மலைப் பிரதேசமாக இருந்தாலும் இதன் வரலாற்றின் பரப்பு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் முதலே கிடைத்துள்ளது. கோத்தகிரி என்ற பெயர் கோத்தர்களின் மலை என்று பொருள் படுகிறது.
கோத்தர்கள் பல நூற்றாண்டுகளாக கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கைவினைஞர் பழங்குடியினர் ஆவர்.அவர்கள் வெளி ஆட்களுடன் பழக விருப்பமில்லாதவர்கள். மேலும் அவர்களது எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக நிலையாக குறைந்து வருகிறது. கடைசியாக கணக்கெடுத்த போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
கோத்தகிரியை அடைவது எப்படி:  கோத்தகிரி ரயில் மற்றும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரிக்கு செல்ல சரியான சமயம்: கோத்தகிரிக்கு பயணம் செல்ல கோடை காலமே சிறந்த பருவமாகும்.

முதுமலை

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு, இது தேசம் முழுவதிலும், சர்வதேச அளவிலும் புகழ்வாய்ந்தது.
முதுமலை புகைப்படங்கள் - தோகை விரித்தாடும் மயில்

நாட்டின் வன உயிரினங்களையும், தாவரங்களையும் காப்பதற்கு ஏற்ற ரசனையும், முயற்சிகளையும் உடைய இடமாக முதுமலை காட்சி அளிக்கின்றது. இந்த பகுதியில் சரணாலயமே மிகவும் பிரபலமான ஈர்க்கும் இடம் ஆகும். அரிய வகை தாவரங்களும், விலங்குகளும் இங்கே காணப்படுகின்றன.
முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினால் ஒழுங்குசெய்யப்பட்ட சவாரிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சரணாலயத்தில் காணப்படும் வித்தியாசமான காடுகளும், உயிரினங்களும் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிடும்.
வெப்ப மண்டலத்தில் மிகவும் அடர்த்தியான காடுகள், வெப்ப மண்டலத்திற்கு தெற்கே உள்ள முள்காடுகள், வெப்பமண்டல உலர்ந்த அடர்த்தியான காடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம். பறவை விரும்பிகளுக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட பறவை இணங்களை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
மானிடர் லிசார்டுகள், கழுதைப்புலிகள், நரிகள், மான்கள், சிறுத்தைப்புலி மற்றும் மறியமான் ஆகிய விலங்குகள் இந்த பசுமை நிறைந்த அமைதியான சூழலில் சமாதானத்தோடு வாழ்ந்து வருகின்றன.
அதிகமான புலிகள் வாழ்கின்ற புலிகள் பாதுகாப்பு மையமும் முதுமலை சரணாலயத்தில் இருக்கின்றது. மேலும், எழுநூறுக்கும் மேற்பட்ட யாணைகள் இந்த சரணாலயத்தில் அலைந்து திரிகின்றன.
அதிக எண்ணிக்கையிலான அரிய உயிரினங்கள் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள்) முதுமலையை தங்கள் இல்லமாக கொண்டு இருக்கின்றன. எனவே நாட்டில் வேறுபட்ட உயிரினங்களை பாதுகாப்பதில் முதுமலை முக்கிய பங்கு வகிக்கின்றது.
காட்டு நெல், மஞ்சள், காட்டு இஞ்சி, இலவங்க பட்டை, மாங்காய், கொய்யா, மிளகு ஆகியவை இந்த சரணாலயத்தில் வளர்கின்றன, இவை பண்படுத்தப்பட்ட தாவரங்கள் வளர்ப்பதற்கு ஆதாரமாக இருப்பதை உறுதிசெய்கின்றன.
பரவிக்கிடக்கும் தாவரபட்சினிகளுக்கு இந்த தாவரங்கள் வாழ்வளித்து வருகின்றன. இங்கே வளரும் இரண்டு வகையான மூங்கில்கள்  (பம்பூசா மற்றும் டெண்ட்ரொகேலாமஸ் ஸ்டிரிக்டஸ்) யானைகள் போன்ற பெரிய விலங்குகளுக்கு உணவாக அமைகின்றன.
முதுமலையிலும் அதை சுற்றிலும்
முதுமலையில் நூற்றுக்கணக்கான ஈர்க்கும் இடங்கள் இருக்கின்றன,  பைக்காரா ஏரி, காலாட்டி அருவி, தெப்பக்காடு யாணை முகாம், மொய்யாறு நதி மற்றும் வன விலங்குகளை பார்க்கவும், அவற்றோடு பழகவும் வாய்ப்பை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற இடங்கள் ஆகியன அவற்றுள் சில.
ஆண்டு முழுவதும் இனிமையான வானிலையே நிலவுகின்றது. சாலை வழியாக முதுமலை நன்கு இணைக்கப்பட்டு இருக்கிறது, எல்லா கால பாகுபாடின்றி அதிக வாகனப்போக்குவரத்தும் இருக்கின்றது. 
எழில்மிகும் காட்சிகளும், பார்வையிடும் இடங்களும், கடினநடைபயில கிடைக்கும் வாய்ப்புகளும், முதுமலையை குடும்ப சுற்றுலாவுக்கும், சாகச பயணத்திற்கும், ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடமாக மாற்றுகின்றது.

No comments:

Post a Comment