Saturday, April 19, 2014

Asbetos

 நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ்


 


ஆஸ்பெஸ்டாஸில் பல்வேறு வகைகள் உள்ளன, ஆனால் பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் என்று ஏதுமில்லை என்கிறார் ஆய்வாளர் முனைவர் யேல் ஸ்டீன். இவரும் இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலையைச் சேர்ந்தவர்தான்.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆஸ்பெஸ்டாஸ் ஒழிப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பல நிபுணர்கள் இப்பொருளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கனடா நாட்டின் ஆண்டோரியோ நகரில் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டினால் புற்றுநோய் ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று கூறிய முனைவர் அலெக் ஃபர்குஹார், இந்தியாவில் இதன் பாதிப்பு 100 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

“ஆஸ்பெஸ்டாஸ் பொறுத்தவரை பாதுகாப்பான பயன்பாடு என்றும் ஏதுமில்லை. நான் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து கோரிக்கை விடுக்கிறேன், கனடாவில் நாங்கள் செய்துவரும் தவறை நீங்கள் (இந்தியர்கள்) செய்யாதீர்கள். ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டை நிறுத்துங்கள், இல்லையெனில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் இந்தியர்கள் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு 52 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதன் விற்பனையும் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகமாக ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தும் நாடு இந்தியா. 2008ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மூன்றரை இலட்சம் டன் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்பெஸ்டாஸை மக்களும் புறக்கணிக்க வேண்டும், நாடும் தடை செய்ய வேண்டும். நடக்குமா?

No comments:

Post a Comment