உலகில் மறைந்து போன உண்மை தகவல்கள்
பல மில்லியன்கள் வருடங்களில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை,
ஐரோப்பாவெங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண்ணை உயர்த்தி பார்க்கும்
இடமெல்லாம் வெள்ளைப்போர் வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில்,
இந்தக் காலங்களை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள்.
மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான்,
இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே
சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில், ‘மம்மோத்’ என்னும் யானை போன்ற
மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன.
இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன.
ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான ‘மம்மோத்’ உலகமெங்கும் பரவி
வாழ்ந்து வந்தன. இந்த மம்மோத், தற்கால யானைகளை விட மிகப்பெரியவை.
உடலெங்கும் நீண்ட முடிகளுடனும், நீண்ட தந்தங்களுடனும் அவை காணப்பட்டன.
மம்மோத், ஐஸ் உள்ள குளிர்ப் பிரதேசங்களிலேயே வாழக்கூடியவை.
இங்கிலாந்தில் கூட இவை வாழ்ந்திருக்கின்றன. மம்மோத் யானையினம் மனிதர்களின்
வேட்டையினாலும், ஐஸ் கட்டிகள் கரைந்து இல்லாமல் போனதாலும், மொத்தமாகப்
பூமியிலிருந்து அழிந்து போயின.
இங்கிலாந்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவை வாழ்ந்திருக்கின்றன. இவை
அழிந்த காலத்திலிருந்து, மெல்ல மெல்லப் பனிப்பிரதேசங்கள் மரம் செடிகள்
முளைக்கும் பிரதே சங்களாக மாறின.
ஆனாலும் வேட்டையாடியே மனித இனம் வாழ்ந்து வந்தது. இன்றிலிருந்து
பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலான, கால கட்டத்தைக்
கடைசி கற்காலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கடைசி கற்காலத்தில் இங்கிலாந்து, வைல்ட் ஷையர்
என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு
கண்டுபிடிக்கப்பட்டது (இதே வைல்ட் ஷையரிலிருந்து தான் இந்தத் தொடரின் முதல்
பகுதி ஆரம்பமாகியது).
சிறிய, பெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு
கட்டப்பட்டிருந்தது. மிகப் பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் கொண்டு அந்த
வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதையே ‘ஸ்டோன் ஹெஞ்ச்‘ என்று
அழைக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச்
சொல்கிறார்கள்.
இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன்
கட்டப்பட்டது என்பது தான். ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும்,
ஏழு மீட்டர் உயரம் உள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில்
இருந்த மலைப்பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.
எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த
முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து,
ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது.
ஒன்றிரண்டு கற்களை அல்ல.
மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தி இருக்கிறார்கள். இது ஆசியா
போன்ற நாடுகளில் நடந்திருந்தாலும், யானைகளைக் கொண்டு, ஒவ்வொன்றாக இழுத்து
வந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கலாம். இல்லை ஐஸ் காலம் என்றாலாவது
மம்மோத் யானைகளின் உதவியுடன் இழுத்திருக்கலாம் என்று சொல்லலாம். ஆனால்
இரண்டும் இல்லை.
இன்றுள்ள பொறியியல் வல்லுனர்கள் கூட, வசதியற்ற சூழ்நிலையில்,
மலைப்பிரதேசங்களைத் தாண்டி இவ்வளவு பெரும் கற்களை இழுத்து வந்திருக்க
முடியுமா என்பது சந்தேகமே! அப்படிக் கொண்டு வந்திருந்தாலும், கிடையாக
இருந்த கற்களை எப்படி நிலைக்குத்தாக நிமிர்த்தியிருக்க முடியும்?
நிமிர்த்திய இரண்டு கற்களின் மேல் இன்னுமொரு கல்லை எப்படிக் கிடையாக தூக்கி
வைத்திருக்க முடியும்?
அக்கால மக்கள் எப்படி அந்த கற்களை இழுத்து வந்தார்கள், எப்படி அவற்றை
நிமிர்த்தினார்கள், நிமிர்த்திய இரு கற்களுக்கு மேல், கிடையாக மற்ற கற்களை
எப்படி அடுக்கினார்கள் என்று பல விதத்தில், இப்போது விளக்கம்
சொல்லப்படுகிறது.
மேலே படங்களில் அவை காட்டப்பட்டுள்ளது. ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது
போலவே கற்கள் கொண்டு வரப்பட்டுக்கட்டப்பட்டது என்றே வைத்துக்
கொண்டாலும், இவ்வளவு நுணுக்கமான அறிவை யார் இவர்களுக்குக்
கொடுத்தார்கள்? மனிதன் தோன்றிய பல லட்சம் ஆண்டுகளிலிருந்து கடைசிக்
கற்காலம் வரை, மனித இனம் எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாமல், ஒரு
காட்டுவாசி போலவே வாழ்ந்திருக்கிறது.
அதிகபட்சம் ஒரு வில்லு, ஒரு அம்புடனோ, கல்லினால் செய்த கோடரியுடனோதான்,
எந்தவித மாற்றமுமில்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது.
மிருகங்களை வேட்டையாடுவதே உணவிற்கான முக்கிய தொழிலாகவும் அவர்களுக்கு
இருந்தது. ஆனால் திடீரென அந்த மனிதர்களில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியது.
அது வரை அறிவேயில்லாத, மிருகங்களுடன் மிருகமாக வாழ்ந்து வந்த
மனிதர்களில், மின்னல் அடித்த கணத்தில் ஏற்பட்டது போல, ஒரு மாற்றம்
ஏற்பட்டது. லட்சம் ஆண்டுகள் ஏற்படாத மாற்றம் சடுதியாகத் திடீரென தோன்றியது.
அந்த மாற்றத்தினால், இப்போது இருக்கும் மனிதர்களால் கூடச் செய்ய
முடியாத சில செயல்களை, அனாயாசமாக அவர்கள் செய்திருக்கிறார்கள்.
அதற்குரிய அறிவும், ஆற்றலும் திடீரென அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.
அது எப்படித் தோன்றியது என்பது தான் நமக்கு முன் உள்ள கேள்வி. அதற்கு
ஏலியன்கள் காரணமாக இருக்க முடியுமா?
ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்ட விதத்தை பார்த்தால், நிலையாக நிறுத்தப்பட்ட
கற்களில் முளை போன்ற கூரான ஒன்றை உருவாக்கி, அதற்கு மேலே வைக்கும் கல்லில்
அந்த முளை பொருந்தும்படி ஓட்டையாகச் செதுக்கி, கற்கள் விலகாமல் இருக்க,
பக்கவாட்டில் வளைந்த அமைப்புகளை உருவாக்கி, கனகச்சிதமாக வட்டவடிவமாக
பொருந்தும் படி ஸ்டோன் ஹெஞ்சை அமைத்திருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் அவர்கள் பாவித்த கருவிகள் என்று பார்த்தால், அவை
வெறும் கற்கள்தான். கற்களால் அடித்து தேய்த்து, இந்தவித உருவங்களுக்கு
மாற்றியுள்ளார்கள். இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை
மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள்
செய்யவில்லை, ஏலியன்கள்தான் செய்தார்கள் என்று வேறொரு பிரி வினர்கள் சொல்ல,
மனிதர்கள் தான் செய்தார்கள்.
ஆனால் ஏலியன்கள் அவர்களுக்கு உதவினார்கள் என்று மற்றுமொரு பிரிவினரும்
சொல்ல, இதுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுடன் அமைதியாக இருக்கிறது ஸ்டோன்
ஹெஞ்ச்.
இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே கால கட்டத்தில்
எகிப்தில் முதல் பிரமிட்டாக ‘கீஸா’ பிரமிட்கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
கீஸா பிரமிட்டை மனிதர்கள்தான் கட்டினார்கள் என்று சொல்லும்போது, அதை
பலர் நம்பு வதில்லை. அந்த அளவுக்கு, மர்மங்களையும் ஆச்சரியங்களையும்
தனக்குள் உள்ள டக்கிய பிரமிட் அது. 146 மீட்டர் உயரமான அந்தப் பிரமிட்,
4500 வருடங்கள் பழமையானது.
மிகப்பிரமாண்டமான ஒரு கட்டடமாக கீஸா பிரமிட்டை பார்க்கும் நாம், அது
கட்டப்பட்டபோது நடந்த முக்கிய விசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்தப்
பிரமிட் இரண்டரை மில்லியன்கள் சதுர கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.
அந்த இரண்டரை மில்லியன் கற்களும், 25 டன்களிலிருந்து 80 டன்கள் வரை
எடையுள்ளவை.
இதில் உள்ள ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ஸ்டோன் ஹெஞ்ச் போலவே,
அனைத்துக் கற்களும் 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
இத்தனை கற்களையும் சதுரமாக வெட்டுவதற்கே, ஆயிரம் பேர் சேர்ந்தாலும் 100
வருடங்களுக்கு மேல் தேவை.
சதுரமாக செதுக்கப்பட்ட இரண்டரை மில்லியன் கற்களையும், 800 கிலோ மீட்டர்
தூரத்திலிருந்து கொண்டு வர, 5000 பேர் சேர்ந்து உழைத்தாலும் 500
வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை. 4500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட
இந்தப் பிரமிட் குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டிருக்கிறது.
குறுகிய காலம் என்று குறிப்பிட்டது, மனிதனால் கட்டப்படக்கூடிய கால அளவை
விட குறுகிய காலம் என்பதை. அப்படியென்றால், கீஸா பிரமிட்டை யார்
கட்டினார்கள்? யாருடைய உதவியுடன் கட்டினார்கள். நம்பவே முடியாத ஒரு
காலத்தில் இப்படி ஒரு அறிவு பூர்வமான கட்டடத்தை கட்டுவதற்கு எப்படிச்
சாத்தியம் ஆகியது? இவற்றிற்கு இன்னும் விடைகள் கிடைக்கவில்லை. பல
விதங்களில் பல பதில்கள் சொல்லப்பட்டாலும், அவற்றை முழுமையாக ஏற்க கஷ்டமாகவே
இருக்கிறது.
பிரமிடுகளின் மர்மங்களையும், அவற்றுடன் ஏலியன்கள் சம்பந்தப்பட்டது என்று
நம்பப்படுவதையும் அந்தச் சுழலில் இருந்து சீக்கிரம் நம்மால் விலக முடியாது.
ஸ்டோன் ஹெஞ்சிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது
‘சில்பரி ஹில்’ என்னும் இடம். அங்கு நாம் யாருமே நினைக்க முடியாத அதிசயம்
ஒன்று உள்ளது.
4,500 ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் பிரமிட் உருவாக்கப்பட்ட காலம்,
ஸ்டோன் ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலங்களில் சில்பரி ஹில்லிலும் ஒரு பிரமிட்
உருவாக்கப்பட்டிருக்கிறது. “பிரமிட்டா? அதுவும் இங்கிலாந்திலா?” என்று
ஆச்சரியப் படுகிறீர்களா? “ஆம்! பிரமிட்டேதான்”. எகிப்தின் பிரமிட், ஸ்டோன்
ஹெஞ்சின் வட்ட வடிவம் என இரண்டையும் இணைத்த மர்மமாக, வரலாற்றிலேயே
வட்டவடிவத்தில் அந்தப் பிரமிட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூம்பு வடிவ
அமைப்பையே பிரமிட் என்பார்கள்.
கீழே சதுரமான அடியைக் கொண்டிருப்பது எகிப்திய பிரமிட். கீழே வட்டமான
அடியைக் கொண்டு அமைக்கப்பட்டது சில்பரி பிரமிட். படத்தில் பார்க்கும்போது
ஏதோ சிறிய மலை போல காணப்படும் இது, கற்களால் எவராலோ கட்டப்பட்டிருக்கிறது.
மேலே புற்கள் முளைத்திருக்கும் அந்தப் பிரமிட்டின் உள்ளே இருப்பது
எல்லாமே கற்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள். இவை அனைத்தும் உலகில்
மறைந்துபோன மர்மங்கள் ஆகும்.
No comments:
Post a Comment